தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

DIN

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அவரது சொந்த ஊரான நாராயணதேவன்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு செய்தார்.

கம்பம், அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாகம் எண் 247 ல் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வாக்கு பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது,

வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்கு பதிவு செய்ய வேண்டும், இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும், நான் வெற்றி பெற்றவுடன் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி உயர்த்த பாடுபடுவேன்.

பேபி அணை பலப்படுத்த குரல் கொடுப்பேன், திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதை லோயர் கேம்ப் வரை அமைக்க அழுத்தம் கொடுப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT