விராலிமலையில் ஒரே இரவில் 85 மி.மீ. மழைப்பொழிவு.!
விராலிமலை, இலுப்பூரில் ஒரே இரவில் 105 மில்லி மீட்டர் மழை
விராலிமலை: விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒரே இரவில் 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிலும்குறிப்பாக விராலிமலையில் 85 மில்லி மீட்டர், இலுப்பூரில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கிய சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. ஃபென்ஜால் புயல் தாக்கத்தின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களும் விவசாயிகளும் இரவு திடீரென்று பெய்த இந்த மழைப்பொழிவால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.