கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஜன. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

DIN

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக ஜன. 24 மற்றும் ஜன. 25 ஆகிய நாள்களில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை, புதுச்சேரி - திருவண்ணாமலை, கடலூர்/பண்ருட்டி, திருக்கோவிலுர், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை, வேலூர் - திருவண்ணாமலை, திருப்பத்தூர் - திருவண்ணாமலை, ஆரணி/ஆற்காடு - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடியரசு நாள், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT