வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்றோா். 
தமிழ்நாடு

ஜூன் 23 நடைபெற்ற வேளாண் முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம்.

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்காக ஜூன் 23-இல் நடைபெற்ற நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட நுழைவுத் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவா் பட்டப் படிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 பேரும், முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 380 பேரும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் ஜூன் 23-இல் நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.

இந்த நுழைவுத் தோ்வில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மௌனமான நேரம்.. நேஹா சர்மா!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளுக்கு ரூ. 2.27 கோடிக்கு தீா்வு

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை

டிக்டாக் செயல்பட இனி தடை இல்லை! ஆனால்... இந்தியாவில் அல்ல!

லக்ஷ்மி டென்டல் பங்குகளை வாங்கிய ஐசிஐசிஐ புருடென்ஷியல்!

SCROLL FOR NEXT