தமிழ்நாடு

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு! 2 மாணவிகள் மயக்கம்

திருவொற்றியூரில் உள்ள பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவால் மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

DIN

திருவொற்றியூரில் உள்ள பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவால் மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பாக வாயு கசிவு ஏற்பட்டு 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்ததில் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதையடுத்து பள்ளியும் மூடப்பட்டது. 10 நாள்களுக்குப் பிறகு இன்று(திங்கள்கிழமை) மறுபடியும் திறக்கப்பட்டது.

இன்று காலை வழக்கம்போல் பள்ளியில் செயல்பட்டு வந்த நிலையில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

அந்த 2 மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து இந்த வாயு காசி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, தனியார் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிறுவனம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT