தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: உறுதி சான்றளிக்க அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

Din

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

இதுதொடா்பாக முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் டாக்டா் விஜய் ஓஜா வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கான அவகாசம் அக். 31 வரை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மறுக்கப்படும் உரிமை!

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

SCROLL FOR NEXT