ஸ்டாலின் 
தமிழ்நாடு

வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர்: ஸ்டாலின்

வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என்று கருணாநிதி புகழாரம் சூட்டியதை முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

DIN

வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது.

இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெங்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலைகள் அமைத்து குருபூஜை நடத்தியிருக்கிறோம். மதுரையில், தேவர் சிலை, கல்லூரிகளை திமுக அரசுதான் அமைத்துள்ளது.

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்காக, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்காக தொடர்ந்து பல நல்லத் திட்டங்களை செய்வோம். இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT