பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இதுபற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு தேர்தலை அணுகப் போகிறோம் என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. நான் யாரையும் கை காட்டவும் இல்லை. இதைப் பற்றி விளக்கமாக கூறவில்லை. நான் எந்த வம்பு சண்டைக்கும் வரவில்லை” என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணியால் தலைமை மாற்றப்படுகிறாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதைப் பற்றி நான் கருத்து கூறவில்லை. நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி; நல்ல ஆத்மாக்கள் இருக்கக்கூடிய கட்சி. அந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
நீட் விவகாரத்தில் திமுக நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் புதிய நாடகத்தை தொடங்கட்டும். இதற்கு தொடக்கமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தட்டும்.
இதைப் பற்றி உச்சநீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும். பாஜகவில் தலைவருக்கான போட்டியில்லை. தலைமை தேர்ந்தெடுப்பதுதான். அனைவரும் சேர்ந்து ஏகமனதாகத் தேர்தெடுப்பதுதான். ஒரு விவசாயியின் மகனாக தொடர்ந்து இந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பேன். வருகிற பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்த மண்ணைவிட்டு நான் எங்கும் செல்லப்போவது இல்லை.
டாஸ்மாக் விவகாரத்திலும் திமுக நாடகமாடுகிறது. இந்த வழக்கை அருகில் உள்ள மாநிலத்துக்கு மாற்ற சொல்கிறீர்கள். அமலாக்கத்துறை நேர்மையான முறையில் செயல்பட்டு அனைவரையும் கைது செய்யும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.