தமிழ்நாடு

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர்.

DIN

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர்.

திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பெண் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து புஷ்பராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பும்போது ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிண்டி போலீசார் விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT