தமிழ்நாடு

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

தவெக மாநாட்டுக்கான புதிய தேதியை தலைவர் விஜய் நாளை அறிவிக்கிறார்.

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நாளை(ஆக. 5) அறிவிக்கவுள்ளார்.

வரும் ஆக. 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டுத் தேதியை மாற்ற வேண்டும் என காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரியும், காவல்துறை பாதுகாப்புக் கேட்டும் தவெக சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவையடுத்து, தவெகவின் மதுரை மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? மாநாட்டு மேடையின் அளவு என்ன? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் காவல் துறை தரப்பில் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The 2nd state convention of the Tamil Nadu Victory Party was earlier scheduled to be held on August 25th, but this has now been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT