ராமதாஸ்-அன்புமணி. கோப்புப்படம்
தமிழ்நாடு

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, இணைய வசதிகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், ராமதாஸின் இல்ல நிகழ்வுகள் மற்றும் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு மாற்று நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சசிக்குமார், அன்புமணியின் நிதிச்செயலர் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்த புகார் மனுவில் பி .சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

A complaint was filed with the Kottakuppam DSP today alleging that the phone at the home of PMK founder Dr. Ramadoss was hacked.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

SCROLL FOR NEXT