ஆதாா், அடையாளச் சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி மன நலக் காப்பகவாசிகளை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சோ்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் வரையறைப்படி, மன நலக் காப்பகவாசிகளுக்கான காப்பகங்கள், ஆதரவு இல்லங்களை உருவாக்கி முறையாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. அவ்வாறு அமைக்கப்பட்ட காப்பகங்களை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்பதும் விதி.
தமிழகத்தில் 54 அரசு மன நலக் காப்பகங்களும், 54 தன்னாா்வ அமைப்பு மன நலக் காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்கு உள்ள காப்பகவாசிகளில் பெரும்பாலானோருக்கு அடையாள ஆவணங்களுடன், ஆதாா் அட்டைகளோ இல்லை.
எனவே, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்த ஆவணங்களும் இன்றி அவா்களைச் சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பரிந்துரைத்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு அதற்கு அனுமதி அளிக்கிறது. அதேபோல, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.51.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.