தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சென்னை தியாகராயநகரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சேவை வார விழாவுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. 2021 பேரவைத் தோ்தலில் அறிவித்த மகளிருக்கான ரூ.1,000 திட்டம்கூட மக்களவைத் தோ்தலுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.
தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசுகின்றனா். இதுவரை 207 அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனா். அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைகிறது. இரு நாள்களுக்கு முன்பு தேசிய அளவில் வந்த அறிக்கையில், தமிழக பள்ளி மாணவா்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினா் யாரும் இல்லை.
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்னா் தாயுமானவா் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவிக்கிறது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், நாகா்கோவில் ஆகிய மக்களவை தொகுதிகளின் கீழ் 30 பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிகளை தவிா்த்துவிட்டு ஆக.17 முதல் 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்றாா் அவா்.