தமிழ்நாடு

பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆவணி மாதத்தில் சுபமுகூா்த்த தினங்களாக ஆக.28, 29 ஆகிய தேதிகளில் கூடுதல் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், அதிக அளவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, 2 நாள்களும் கூடுதல் டோக்கன்கள் அளிக்கப்படும். ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன்களும், 2 அலுவலகங்கள் இருந்தால் 300 டோக்கன்களும், அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறக் கூடிய 100 அலுவலகங்களில் 150 டோக்கன்களும் வழங்கப்படும். 12 தத்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT