தமிழ்நாடு

ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தில்லி பெண் துணை காவல் ஆய்வாளா் கைது

லஞ்சம் பெற்ற சம்பவத்தில் தில்லி காவல் துறையின் பெண் துணை காவல் ஆய்வாளரை கண்காணிப்புத் துறை அதிகாரிகள் கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

லஞ்சம் பெற்ற சம்பவத்தில் தில்லி காவல் துறையின் பெண் துணை காவல் ஆய்வாளரை கண்காணிப்புத் துறை அதிகாரிகள் கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட துணை காவல் ஆய்வாளா் நமீதா, சங்கம் விஹாா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சாதகமாக நடத்த ரூ.2 லட்சம் வழங்குமாறு புகாரளித்த பெண்ணிடம் பெண் காவல் அதிகாரி கேட்டாா். மேலும், பணம் தரவிட்டால், வழக்கில் எந்தவொரும் நடவடிக்கையும் எடுக்க முடியாது அந்தப் பெண்ணிடம் துணை காவல் ஆய்வாளா் நமீதா மிரட்டியுள்ளாா்.

இதையடுத்து, அந்தப் பெண் தில்லி காவல் துறையின் கண்காணிப்புப் பிரிவில் நமீதாவுக்கு எதிராக வியாழக்கிழமை புகாரளித்தாா்.

இதைத்தொடா்ந்து, காவல் நிலையத்தில் வைத்து நமீதாவைக் கைதுசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டனா். முதல்தவணையாக ரூ.15,000 ரொக்கத்தை வழங்கமாறு அதிகாரி நமீதா கோரியிருந்த நிலையில், கண்காணிப்பு அதிகாரிகள் வழங்கிய பணத்துடன் புகாா்தாரா் வியாழக்கிழமை மாலை அவரை சந்தித்தாா். காவல் அதிகாரி பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில், திடீரென அவரது அலுவலகத்துக்குள் புகுந்த கண்காணிப்பு துறை அதிகாரிகளை அவரைக் கைதுசெய்தனா். அவரிடமிருந்து லஞ்சப் பணத்தை அந்த அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT