@GMSRailway | X
தமிழ்நாடு

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!

வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைப்பு...

DIN

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வழித்தடத்தில் முதல்முதலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இன்று(ஜன. 15) அதிகாலை மணிக்கு 6.05 புறப்பட்டது.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி கண்ணாடி டிரைலர்!

டென்னிஸ் ராக்கெட் உடைப்பு: மெத்வதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சூழல் - சுற்றுலாத் தலம் மூடல்!

மயில் கழுத்து... அனன்யா பாண்டே!

ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

SCROLL FOR NEXT