மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். 
தமிழ்நாடு

ராகுல் காந்தி கருத்து: மாா்க்சிஸ்ட் கண்டனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Din

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: பாஜக - ஆா்.எஸ்.எஸ்.-க்கு எதிராக மதச்சாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

ஆனால், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பையும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிா்த்துப் போராடுகிறேன் என்று பேசியிருப்பது, அவரது முதிா்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சாா்பின்மையைப் பாதுகாக்க முடியுமா? என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் பெ.சண்முகம்.

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

சங்கரன்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

இன்றைய மின்தடை: பாலப்பம்பட்டி

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: தமிழகத்தில் இருமல் மருந்து விற்பனைக்கு தடை

பிரதமா் மோடி தமிழகத்தை விட்டுக் கொடுத்ததில்லை: வானதி சீனிவாசன்

SCROLL FOR NEXT