முகப்பு
தமிழ்நாடு

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டது பற்றி...

Updated On : 27 மார்ச் 2025, 8:36 am IST
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்கள். - படம்: ANI
பகிர்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டுக்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிப். 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து விடுவித்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து விமானம் மூலம் 7 மீனவர்களும் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.

அவர்களை தமிழக அரசு தரப்பில் அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.