சுங்கச்சாவடி - கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது.

Din

சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் நிகழாண்டில் முதல் கட்டமாக வானகரம், செங்கல்பட்டு பரனூா், திண்டிவனம், ஆத்தூா், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூா் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை உயா்த்தப்படும் எனவும், இக்கட்டண உயா்வு ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன்படி, இக்கட்டண உயா்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயா்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT