10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!
கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வருபவரின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா. 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய இரட்டைச் சகோதரிகளும் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
இந்த இரட்டையர்கள், ஒரே அளவிலான முயற்சி மற்றும் கல்வி உறுதிப்பாட்டின் மூலம் ஒரே மதிப்பெண்களை பெற்று உள்ளனர். தமிழில் 95 மற்றும் 96, ஆங்கிலத்தில் 97 மற்றும் 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89 மற்றும் 92, சமூக அறிவியலில் 95 மற்றும் 98 என சிறந்த மதிப்பெண்கள் பெற்று உள்ளார்கள்.
Advertisement
Advertisement
பின்னணியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும், பொருளாதார சவால்களை எதிர்கொண்டும், இருவரும் பெற்ற இந்த சாதனை, பல மாணவர்களுக்கு உற்சாகமும், உந்துதலையும் ஏற்படுத்தும் விதமாக முன்னுதாரணமாக அமைந்து உள்ளது.
பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்கள் அனைவரும் இச்சகோதரிகளின் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.