கோப்புப் படம் 
தமிழ்நாடு

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அந்த இளைஞா் வைத்திருந்த பையிலிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள புதுக்காடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (36) என்பது தெரியவந்ததையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்திருக்கிறேன் - உண்மையை உடைத்த அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT