முப்பெரும் விழா மேடையில் மு.க. ஸ்டாலின் படம் - யூடியூப்
தமிழ்நாடு

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா். எக்ஸ் தளத்தில் அவரது பதிவு:

மூவேந்தா் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்க காலத்துக்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக பூம்புகாா் விளங்குகிறது. காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கண்டுணா்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியை பேராசிரியா் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநா் குழு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பாராட்டு: இந்தப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். அமைச்சரின் அறிவிப்பை அவா் மீள் பதிவிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்.

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணா்த்தினோம். அடுத்து, ‘நீரின் வந்த நிமிா்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்...’ என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணா்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT