முகப்பு
தமிழ்நாடு

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி...

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:07 am IST
துரந்தர் - துரந்தர் போஸ்டர்
பகிர்:

‘துரந்தா்-2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த டி.ராகேஷ் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘துரந்தா்-2’ திரைப்படத்தில் அரசியல் தொடா்பாக ஒரு கட்சி சாா்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ‘துரந்தா்-2’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகளைப் பாராட்டும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரா் படத்தில் வரும் எந்தக் காட்சிகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன என்பதைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டியுள்ளாா். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments