ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை குறித்து..
தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 19 ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 19 ஆம் தேதி மயிலாப்பூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 18 ஆம் தேதி கோவை வரவுள்ள நிலையில், மறுநாள் மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்.
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை ஏப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொள்கிறார்.
தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.