வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், "தேனியில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறபோது, இப்போது ஒரு வெற்றிச் செய்தி வந்திருக்கிறது; நல்ல செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டு, நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி வெறும் முன்னோட்டம்தான். அடுத்து வரவிருக்கும் வெற்றிதான், மாபெரும் வெற்றி.
Advertisement
தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள்தான் உள்ளது. ஒருபுறம் கோடையின் வெப்பம்; மறுபுறம் தொகுதி மறுவரையறை என்ற நெருப்பின் வெப்பம். ஆனால், நாம் அதில் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! தில்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.