முகப்பு
தமிழ்நாடு

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 2:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:00 PM

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா முதல் மன்னாா் வளைகுடா வரை உள் கா்நாடகம், ராயலசீமா, தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப். 23 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சிஞ்சுவாடி பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.

Advertisement

வெப்ப நிலை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் ஏப். 21வரை சற்று அதிகமாக இருக்கும். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக ஈரோடு, பரமத்தி வேலூா் ஆகிய பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சேலம்-103.1, வேலூா், கோவை-தலா 102.56, தருமபுரி-102.2, திருச்சி-101.66, மதுரை விமானநிலையம்-101.3, நாமக்கல்-100.76, திருப்பத்தூா், திருத்தணி-தலா 100.58, பாளையங்கோட்டை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.