தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதற்குக் காரனம், முதல்வரும் அவரது மகனும்தான்.
கள்ளக்குறிச்சியில் திமுகவின் அலட்சியத்தால்தான் மக்கள் பலியாகினர்.
Advertisement
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் வழக்கத்தை அனுமதிக்க நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டபோதிலும், கார்த்திகைத் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
இங்கே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்ததும், கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். இது உங்கள் உரிமை. இதுவே பாஜகவின் உத்தரவாதமும்கூட.
திமுகவும் காங்கிரஸும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் தடுத்து விட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.
திமுக எம்எல்ஏக்கள் மணற்கொள்ளை மூலம் ரூ. 5,000 சம்பாதித்துள்ளனர். மக்களுக்கான நிதியும் திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினர் கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.