முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம்! உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களித்தது பற்றி...

Updated On : 23 ஏப்ரல் 2026, 12:25 pm IST
உதயநிதி ஸ்டாலின் - X / Udhayanidhi Stalin
பகிர்:

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.

Advertisement

Advertisement

உடன் அவரது மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி மற்றும் மகன் இன்பநிதி ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பின் புகைப்படங்களைப் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின், வாக்களிப்போம், ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

summary

Let us protect Democracy and the Constitution! — Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments