ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம்! உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களித்தது பற்றி...
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.
Advertisement
உடன் அவரது மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி மற்றும் மகன் இன்பநிதி ஆகியோரும் வாக்களித்தனர்.
வாக்களித்த பின் புகைப்படங்களைப் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின், வாக்களிப்போம், ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.