தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
மேலும், தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Advertisement
இதற்கு முன்னதாக, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78.29 சதவிகிதமே அதிகளவாக இருந்த நிலையில், தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஆண்களைவிட (83.57% - 2.80 கோடி), பெண்களே (85.76% - 2.93 கோடி) வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 60.49 சதவிகிதத்தினரும் (7.728 பேர்) வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 91.78 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.
தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.