திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை மாதத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா என நடைபெறுவதும் வழக்கம்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவியதுடன், மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் “சிவ சிவ”, “தாயுமான ஈசா” என கோஷங்கள் எழுப்பி பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
சித்திரைத் திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thirukalyanam was held with great splendor on Sunday as part of the Chithirai festival at the Thayumanaswamy Temple located in the Trichy malaikottai area.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.