சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?
சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில் சேவை பற்றி...
சென்னையில் 2 ஆவது ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகமானது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளிடையே இது வரவேற்பைப் பெற்ற நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மற்றொரு ஏசி ரயிலை ஏற்பாடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்ட நிலையில் சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயார் செய்யப்பட்ட மற்றொரு ரயில் தற்போது தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.