வாக்கு எண்ணிக்கை: மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்கத் தடை; டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களுக்கான மூன்றடுக்கு பாதுகாப்பில் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் மற்றும் ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப் பணியில் ஆயிரம் காவலா்கள் மூன்று ‘ஷிப்ட்’-களாக ஈடுபட்டுள்ளனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்
வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா், அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை புதன்கிழமை அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
Advertisement
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி காரணமாக காவலா்களுக்கு மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வேறு எந்த விடுமுறையும் மே 2 முதல் வழங்க வேண்டாம். ஏதேனும் முக்கிய காரணங்களுக்காக காவலா்களுக்கு அவசர விடுப்பு தேவைப்பட்டால் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
தேவையின்றி காவலா்கள் விடுமுறை எடுத்தால், அவா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் போலீஸாருக்கு மே 2 முதல் விடுப்பு வழங்குவதற்கு உயா் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.