சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக...
தமிழ்நாட்டின் சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று(ஜூன் 3) பதவியேற்க உள்ளார்.
Advertisement
Advertisement
இதையொட்டி, தற்போதைய சட்டம் - ஒழுங்கு டிஜிபி, சந்தீப் ராய் ரத்தோருக்கு சிறைத்துறை டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் நேரத்தில், சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர், சிஐடி -அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.