மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
மே தினத்தையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்...
சென்னை மெட்ரோ ரயில் நாளை (மே 1) ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டநெரிசல் குறைவாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான பகல் 12 முதல் இரவு 8 வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.