பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!
பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து இருவர் பலியாகினர்.
பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து இருவர் செவ்வாய்க்கிழமை பரிதாபமாக பலியாகினர்.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (50) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ராகேஷ்(41). இவர்கள் இருவரும் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் இவர் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி - புதிய திருப்பூர் சேலம் - கொச்சி புறவழிச்சாலை அருகே வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடிரென நிறுத்தியது.
Advertisement
Advertisement
இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், ராகேஷ் இருவரும் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரது உடலையும் மீட்ட பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Two people tragically died on Tuesday when a car collided with a lorry near Perumanallur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.