நயினார் நாகேந்திரன் கோப்புப் படம்
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

கூட்டணி ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜகவில் இருந்து சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், "இங்குள்ள அனைவரையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் பாஜகவில் இருந்து, 20 - 30 பேர் எம்எல்ஏக்களாக வருவார்கள். சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள். அமைச்சராக வருவதற்கு வி.பி. துரைசாமி ஆசிர்வாதம் வாங்கிவிட்டார். இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும்" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பிறகே தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் பிடிவாதம் காட்டவில்லை என்று பதிலைத்துள்ளார்.

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

nainar nagendran talks about admk - bjp alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT