கோப்புப்படம்  
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கையில் கைது!

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மீனவர்கள் கைது: தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களை நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், மீனவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைக்கவுள்ளனர்.

கடந்த மாதம் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மொத்தம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குகின்றனர்.

இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

11 Tamil Nadu fishermen arrested in Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு தியாகி இனி உருவாக மாட்டான்!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

வைகோவுக்கு 82 வயதா? 28-ஆ என சந்தேகம் வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

அலுவலகத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு! படமெடுத்து நின்ற பாம்பை மீட்ட காவலர்!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT