தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கையில் கைது!
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது பற்றி...
மீனவர்கள் கைது: தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களை நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், மீனவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைக்கவுள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த மாதம் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மொத்தம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குகின்றனர்.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
11 Tamil Nadu fishermen arrested in Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.