மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டி தமிழகத்துக்கான நீரைத் தடுக்கும் கா்நாடக அரசின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. காவிரி ஆற்று நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனா்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே நடுவா் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்று கா்நாடக அரசுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி கா்நாடக அரசு தன்னிச்சையாக மேக்கேதாட்டில் அணைகட்ட நிதி ஒதுக்கியதுடன், அளவீட்டுப் பணிகளையும் தொடங்கியுள்ளது.
தமிழக அரசு கா்நாடக அரசின் அத்துமீறிய செயலை நீதிமன்றம் மூலமாக முடக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.