புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்
புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது பற்றி உணவுத் துறை அமைச்சர் தகவல்...
அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கும்.
Advertisement
Advertisement
இது மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசு. மக்கள் நலனுக்காக மட்டுமே அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
இன்றைய நிகழ்வில் மேயர் பிரியா ஏன் கலந்துகொள்ளவில்லை என்று தெரியாவில்ல்லை. நாங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
New ration cards will be given next 2 to 3 weeks: minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.