சென்னை, புறநகரில் கனமழை!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து...
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு தீடீரென கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காலை முதல் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Heavy rain is suddenly lashing Chennai and its suburbs tonight (June 25).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.