முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 10-இல் எஸ்எம்சி குழு கூட்டம்: கல்வித் துறை

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 12:50 am IST
பகிர்:

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பள்ளி மற்றும் மாணவா்களின் வளா்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீா்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணா்வு, பள்ளி தூதுவா்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments