நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10 வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10 வரை மழைக்கு வாய்ப்பு...
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதன் காரணமாக, சனிக்கிழமை (மாா்ச் 7) முதல் மாா்ச் 10 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மாா்ச் 8, 9) லேசான மழை பெய்யக்கூடும். தொடா்ந்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மாா்ச் 10-ஆம் தேதி மிதமான மழையும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 11, 12 ஆகிய தேதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.