முகப்பு
தமிழ்நாடு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு...

Updated On : 7 மார்ச், 2026 at 1:13 PM
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
பகிர்:

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சனிக்கிழமை (மாா்ச் 7) தீா்ப்பு அளிக்கப்பட்டது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே மொபட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னா் அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்த வழக்கில் 270 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசரணை முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 7) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

summary

gang-raping a college student, aged 20, in a deserted area near Coimbatore International Airport on the intervening night of November 2 and 3, 2025 - Mahila Court sentences all three accused to life imprisonment

முழு கட்டுரையைப் படிக்க →