அரசியல் பரபரப்புகளுக்கு இடையே கட்சிப் பெயரை இன்று அறிவிக்கிறாரா முக்கிய பிரபலம்?
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே புதிய கட்சித் தொடங்கிய சசிகலா கட்சிப் பெயரை இன்று அறிவிக்கிறாரா என்பது பற்றி..
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ஆம் தேதி அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நலனுக்காக புதிய கட்சியைத் தொடங்குகிறேன் எனக் கூறி, அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில், பரபரப்பைக் கூட்டியிருந்தார் சசிகலா. இந்த நிலையில், இன்னமும் கட்சியின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.