முகப்பு
தமிழ்நாடு

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 மார்ச், 2026 at 6:52 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (எண்: 12661) மாா்ச் 17 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.02 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

அதேபோல், திருநெல்வேலி-எழும்பூா் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12632) மாா்ச் 16 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →