FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 மார்ச் 2026, 12:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (எண்: 12661) மாா்ச் 17 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.02 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

Advertisement

Advertisement

அதேபோல், திருநெல்வேலி-எழும்பூா் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12632) மாா்ச் 16 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments