திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஜூன் 20, 24 தவிா்த்து) 75 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாஞ்சி மணியாச்சி - நாகா்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணியால் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் 75 நிமிஷம் காலதாமதமாகப் புறப்படும்.
Advertisement
Advertisement
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் மேற்கண்ட தினங்களில் 75 நிமிஷங்கள் கால தாமதமாக காலை 8.30 மணிக்குத்தான் புறப்படும்.
ஜூன் 24-இல் மாற்று வழியில் இயக்கம்:
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 24-ஆம் தேதி சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் டவுன், குளித்துறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூா் மற்றும் கொல்லாம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trichy - Thiruvananthapuram Central Superfast Express: Delayed departure from June 15 to June 30.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.