ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், கூடுதல் பொறுப்பு!
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு தொடர்பாக...
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் பொறுப்பு தொடர்பான அறிவிப்பும் வெளியாகியள்ளது.
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பால நாக தேவி, தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவு டிஜிபியாக நியமனம்.
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.
Advertisement
Advertisement
குடிமைப் பொருள் வழங்கல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, குடிமைப் பொருள் வழங்கல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPS officers transferred by tn govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.