ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி...
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக செந்தில்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக டோங்கரே பிரவின் உமேஷ்
திருப்பத்தூர் எஸ்.பி.யாக இருந்த வி. சியாமளா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமனம்.
கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த எஸ். அசோக் குமார், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் எஸ்.பி.யாக அக்ஷய் அனில் வாகரேவுக்கு பதவி உயர்வு வழங்ப்பட்டுள்ளது.
அதேபோல பெரம்பலூர் எஸ்.பி.யாக டாக்டர் வி. லலித் குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Tamilnadu govt IPS Transfers and Postings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.