கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவி்ல் அருகே உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரமலான் திருநாளை முன்னாட்டு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈக்தா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஈதுல்பித்ர் எனும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி, ஆயங்குடி ஈக்தா திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவியு தலைமையில் நடைபெற்றது.
தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர், சகோதரத்துவத்தைப் போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.