விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!
தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களில் சென்னை முதலிடம்
தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களின் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, 2.30 கோடி பயணிகள் பயன்படுத்தியதாக சென்னை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 2.7 சதவிகிதம் அதிகம்.
Advertisement
Advertisement
இரண்டாவது இடத்தில், 32.2 லட்சம் பயணிகளுடன் கோவை விமான நிலையம் உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5.2 சதவிகிதம் அதிகம். கோவை விமான நிலையத்தில் கடந்த நிதியாண்டில், 22,462 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன.
கோவையில், கடந்த நிதியாண்டில் சர்வதேச பயணத்துக்காக 2.97 லட்சம் பேரும், 31.2 லட்சம் பேர் உள்நாட்டு பயணத்துக்காகவும் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
மூன்றாவதாக, 22.2 லட்சம் பயணிகளுடன் திருச்சி விமான நிலையமும், நான்காவதாக 13.8 லட்சம் பயணிகளுடன் மதுரையும், 2.90 லட்சம் பயணிகளுடன் தூத்துக்குடியும், 1.27 லட்சம் பயணிகளுடன் சேலம் விமான நிலையமும் உள்ளன.
Chennai ranks first among the airports in Tamil Nadu utilized by the highest number of passengers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.